என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பேட்டரி வாகனம்"
- ரூ.1 கோடியே 4 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டது
- ஊராட்சி மன்ற தலைவர்களிடம் சாவியை வழங்கி பணியினை தொடங்கி வைத்தனர்
ஆரணி:
மேற்கு ஆரணி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆகாரம், தேவிகாபுரம் தச்சூர், ஓண்ணுபுரம, அப்பநல்லூர், அத்திமலைபட்டு, குன்னத்துர் மலையம்பட்டு ஆகிய 27 ஊராட்சிகளுக்கு ஸ்வச் பாரத் மிஷன் சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு முதல் கட்டமாக ரூ.1 கோடியே 4 லட்சம் மதிப்பீட்டில் 42 பேட்டரி வாகனங்கள் குப்பை சேகரிக்க பயன்பாட்டிற்கு கொண்டு வரும் விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மேற்கு ஆரணி சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன் பங்கேற்றார். மேலும் ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்களிடம் குப்பை சேகரிக்கும் வாகனத்தின் சாவியை வழங்கி பணியினை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் துணை சேர்மன் வேலாயுதம், ஓன்றிய கவுன்சிலர்கள் பகுத்தறிவு, கீதா மோகன், கீதாசரவணன், ஏழுமலை மற்றும் திமுக ஒன்றிய செயலாளர்கள் துரை மாமது, மோகன், ஆகியோர் உடன் இருந்தனர்.
- இந்தியாவில் பேட்டரி மூலம் இயக்கப்படும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு 50 சதவீத வரி சலுகை
- பேட்டரியால் இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் 100 சதவீதம் வரி விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை 2019க்கு இணங்க பேட்டரி வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்க தமிழ்நாடு போக்குவரத்து ஆணையரகம் கேட்டு கொண்டது.
01.01.2023 முதல் 31.12.2025ம் ஆண்டு வரை பேட்டரியால் இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் 100 சதவீதம் வரி விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் பேட்டரி மூலம் இயக்கப்படும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு 50 சதவீத வரி சலுகை வழங்க அரசாணை ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.
- பழைய சர்க்கார்பதி கிராமத்தில் இருந்து சேத்துமடை வருவதற்கு போக்குவரத்து வசதி கிடையாது.
- முதல்கட்டமாக பழைய சர்க்கார்பதி கிராமத்திற்கு அந்த பேட்டரி வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனைமலை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சேத்துமடை பகுதியில் பழைய சர்க்கார்பதி பழங்குடியின கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு 5-ம் வகுப்பு வரை செயல்படும் தொடக்கப்பள்ளியும் உள்ளது. மேல் படிப்பு படிக்க வேண்டும் என்றால் இந்த கிராமத்தை சேர்ந்த குழந்தைகள் அடர்ந்த வனத்திற்கு நடுவே சுமார் 7 கிலோ மீட்டர் பயணித்து சேத்துமடை பகுதிக்கு வர வேண்டும்.
பழைய சர்க்கார்பதி கிராமத்தில் இருந்து சேத்துமடை வருவதற்கு போக்குவரத்து வசதி கிடையாது. மாணவர்கள் நடந்தே இங்கு வந்து படித்து வருகின்றனர். பஸ் வசதி இல்லாத காரணத்தால் இந்த கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்பதில் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் படிப்பை தொடரமுடியாமல் கைவிட்டுள்ளனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை சரியான போக்குவரத்து வசதி இல்லாததால் இந்த கிராமத்தை சேர்ந்த 34 பழங்குடியின மாணவர்கள் எழுதவில்லை.
இந்த நிலையில் பழங்குடியின மாணவர்களின் நலன் கருதியும், அவர்களின் கல்வியை மேம்படுத்தவும் தொண்டு நிறுவனம் சார்பில் சி.எஸ்.ஆர். திட்ட நிதியில் இருந்து ரூ.2.5 லட்சத்தை ஒதுக்கீடு செய்து ஓட்டுநர் மற்றும் 12 மாணவர்களுடன் பயணிக்கும் வகையில் பேட்டரி வாகனத்தை வடிவமைத்துள்ளனர்.
முதல்கட்டமாக பழைய சர்க்கார்பதி கிராமத்திற்கு அந்த பேட்டரி வாகனம் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் நாகரூத்து, சின்னார்பதி, தம்மம்பதி, கோழிகமுத்தி உள்ளிட்ட பழங்குடியின கிராமங்களுக்கும் பேட்டரி வாகனம் வழங்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து பழங்குடியின மக்கள் கூறுகையில், தங்களைப் போல் இல்லாமல் தங்கள் தலைமுறைகளாவது கல்வி கற்று உயர்நிலை அடையவேண்டும் என்பது தங்கள் கனவாக உள்ளது. இதற்கு பஸ் வசதி தடையாக நிற்பது தங்களுக்கு வேதனை அளித்தது. தற்போது தனியார் நிறுவனங்கள் பேட்டரி வாகனம் வழங்கியிருப்பதால், எங்களது கிராம மாணவர்கள் உயர்கல்வி கற்பதில் போக்குவரத்து ஒரு தடையாக இருக்காது என பழங்குடியின மக்கள் தெரிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்